செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Tuesday, November 21, 2006
மோசமான புற்றுநோயால் அன்டன் பாலசிங்கம் பாதிப்பு
லண்டன், நவ. 22
விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் மோசமான புற்று நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். உட லின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ள நிலையில் இனிக் குணப் படுத்த முடியாத உபாதைக்குள்ளும், பிணிக் குள்ளும் அவர் சிக்கியிருக்கின்றார்.

அறுபத்தெட்டு வயதாகும் அன்ரன் பால சிங்கம் கடந்த 35 வருடங்களாக நீரிழிவு நோய் காரணமாக அவரது இரு சிறுநீரகங் களும் ஒன்றன் பின் ஒன்றாகச் செயலிழந்து போக, போராளி ஒருவரிடமிருந்து தான மாகப் பெற்ற ஒரு சிறுநீரகமே இப்போது அவரது வாழ்வுக்குத் தாக்குப் பிடிக்கின்றது.

நீரிழிவு, சிறுநீரகச் சிக்கல், உயர் இரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவற்றுடன் தமது அரசியல் பணிகளை தீவிர வைத் திய சிகிச்சைகளுக்கு மத்தியில் மேற்கொண்டு வந்த அவர் கடந்த எட்டு, ஒன்பது மாதங் களாகக் கடும் நோயால் அவதிப்பட்ட நிலை யில் அரசியல் பணிகளைத் துறந்து ஒதுங்கி யிருக்கிறார் என்பதும் தெரிந் ததே.

அவருக்குப் புற்றுநோய் மோசமாகப் பரவியிருப்பதை டாக்டர்கள் கடந்த வாரம் தான் கண்டுபிடித்திருக்கின்றார்கள்.

வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச் சைகள் எங்கும் புற்றுநோய் பரவியுள் ளதை உறுதிப்படுத்தியுள்ள வைத்தியர் கள் அது சுமார் ஒரு வருட காலத்துக்கு முன்னர் உருவாகி, உடல் எங்கும் பரவத் தொடங்கியிருக்கலாம் எனவும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
புற்றுநோய் காரணமாக வயிற்றிலும், ஏனைய உறுப்புகளிலும் அவருக்கு வலி மற்றும் கடும் நோவு, உடல் உளைவு உபா தைகள் எழுந்துள்ளன. இதைச் சமாளிப்ப தற்காக அவருக்குத் தொடர்ந்து "மோர் பின்' வலித் தடுப்பு மருந்து வழங்கப்பட்டு வருகின்றது.

கடந்த வியாழனன்று அவர் வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு, சில பரிசோ தனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். அவ ரது வயிற்றுக்குள் ஊசி ஒன்று செலுத்தப் பட்டு, அதன் மூலம் அவரது ஈரலின் சில சிறிய துண்டங்கள் சோதனைக்காகப் "பிய்த்து' எடுக்கப்பட்டன. அந்தத் துண் டங்கள் மீதான புற்றுநோய்ச் சோதனை அறிக்கை மூலம் அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயின் வகையைக் கண்டறிய முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அந்தச் சோதனை அறிக்கை இரண்டொரு நாள்களில் கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.
நோய் உபாதை காரணமாகத் தனது லண் டன் வீட்டில் தொடர்ந்து ஓய்வில் இருக் கும் அன்ரன் பாலசிங்கம், வலித் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு நோவு தணியும் சம யங்களில் சரளமாக உரையாடுகின்றார்.

""தானமாகப் பெற்ற ஒரு சிறுநீரகத்தை யும் எனது மூளையையும் தவிர, ஏனைய உடற்பகுதிகளுக்கு புற்றுநோய் பரவி விட் டது போலும்'' என்று குறிப்பிட்டார் அவர்.
நோய் உபாதைகளுக்கு மத்தியிலும் மிகுந்த மனத்திடத்துடன் அவர் காணப் படுகின்றார். நோயின் எதிர் விளைவை எதிர்கொள்ளும் மனப்பக்குவத் தயார் நிலையில் தெளிவோடு அவர் இருக்கின்ற மையை அவரோடு உரையாடும்போது உணர முடிகின்றது.

தமது மோசமான உடல் நிலைமையை விடத் தனது தமிழ் மக்களின் எதிர்காலம் பற்றிய கருத்தே அவரது மனதில் ஆழப் பதிந்து, வெளிப்படுவதையும் உணர முடிந் தது.

புற்றுநோய் எல்லை மீறிப் பரவி யுள்ள நிலையில், அதற்கான சிகிச்சை ஏற்படுத் தக் கூடிய மோசமான நெருக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அந்த சிகிச்சையைத் தவிர்த்து, இயற்கையை எதிர்கொள்ள அவர் விரும்புகின்றார் போலும்.

இந்த நோய்க்கு அவர் தாக்குப் பிடித்து நிற்கக் கூடிய காலம் குறித்து சில உத்தேசத் தகவல்களை டாக்டர்கள், திருமதி அடேல் பாலசிங்கத்துக்குத் தெரியப்படுத்தியிருக் கிறார்கள் எனவும் அறியவருகின்றது.

மாற்று சிறுநீரகம் பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின் பின்னர், அந்தச் சிறுநீரகம் அவரின் உடலுடன் பொருந்திச் செயற்படுவதற்காகத் தொடர்ந்து வழங் கப்பட்ட உயர் வலிமையும், வீரியமும் மிக்க மருந்துகளே அவரின் உடலில் புற்று நோயை உடற்கலங்களின் அபரிதமான திடீர் வளர்ச்சியை தோற்றுவித்திருக் கலாம் என டாக்டர்கள் அபிப்பிராயம் தெரிவித்திருக்கின்றார்கள்.

உயிருக்காகப் போராடும் நிலையை நோக்கி இந்நோய் அவரைத் தள்ளியிருக் கின்றது என்பதே தற்போதைய நிலைமை யாகும்.

-உதயன்
posted by தமிழினி @ 11:58 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி