செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Tuesday, November 21, 2006
'சிங்களக் ஹிட்லர்" ராஜபக்சவின் இந்திய வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் உண்ணாநிலை அறப்போர்!
ஸ்ரீலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 26ம் இந்தியாவிற்கு பயணம் செய்வதைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தினர் அன்றைய நாளில் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபடப்போவதாக அவ்வமைப்பின் பொதுச்செயலர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திரு தொல்.திருமாவளவன் அவர்களால் இன்று (21.11.2006) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஈழத்தமிழர்கள் மீது சிங்களப் படையினர் நடத்தும் இனவெறித்தாக்குதலைத் தடுத்திடவும், யாழ் - கொழும்பு நெடுஞ்சாலையை நிலையாக திறந்துவிட ஆவன செய்யவும், இந்திய உணவுப்பொருட்களை செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் வழங்கச் செய்யவும் வலியுறுத்தி 20.11.2006 அன்று தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களைச் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வரும் 26.11.2006 அன்று இந்;தியாவிற்கு வரும் இராஜபக்சவின் வருகையை எதிர்த்தும் சென்னையில் விடுதலைச்சிறுத்தைகளின் உண்ணாநிலை அறப்போர் நடைபெறுகிறது.

-சங்கதி
posted by தமிழினி @ 1:21 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி