செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Sunday, November 19, 2006
முன்னாள் தழிழக முதல்வர் மத்திய அரசுக்கு அவசரக் கடிதம்
இந்திய மத்திய அரசாங்கம் இலங்கையில் தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாக அறிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராம் மத்திய அரசுக்கு அவசரக்கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.


அக்கடிதத்தில்,

இலங்கைத் தமிழர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருந்து பொருட்களை நேரடியாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், தற்போதைய சூழ்நிலையில், இலங்கை அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்படும் இந்த உதவிகள் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட மக்களை சென்றடையும் என்பது கேள்விக்குறியாக உள்ளதால், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஊடாக இந்த உணவுப்பொருட்களை அனுப்பி வைக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,

இதேவேளை இலங்கையில் இடம்பெறும் படுகொலைகளை கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு அனுமதி வழங்கப்படாமை கண்டனத்திற்குரியது எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலனுக்காக செய்யக்கூடிய போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் ஒரு முக்கிய ஜனநாயகக் கடமையாகும்.

இவ்வாறான போராட்டங்களுக்கு தமது ஆட்சிக் காலத்தில் முறையாக அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

ஆனால் இன்றைய திராவிட முன்னேற்ற கழக அரசு தற்போது அனுமதி வழங்க மறுப்பது மக்கள் விரோதச் செயலாகும் எனவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-சங்கதி
posted by தமிழினி @ 7:48 PM  
1 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி