செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Thursday, November 16, 2006
பலப்பிட்டி நீதிமன்றத்தை வீடியோ படமெடுத்த முஸ்லிம் இளைஞன் பொலிஸாரால் கைது

பலப்பிட்டி நீதிமன்றத்தை வீடியோ மூலம் படமெடுத்த இளைஞர் ஒருவரை பொலிஸார் நேற்று புதன்கிழமை காலை கைது செய்துள்ளனர்.கண்டி கட்டுகஸ்தோட்டையைச் சேர்ந்தவரெனக் கூறப்படும் 28 வயது மதிக்கத்தக்க முஸ்லிம் இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சந்தேக நபரிடமிருந்து வீடியோ கமரா ஒன்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கையடக்கத் தொலைபேசி கமராவில் நீதிமன்றம் முழுவதும் படமாக பதியப்பட்டுள்ளதென அம்பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் ஆரியரத்ன தெரிவித்தார்.

நேற்றுக் காலை 9 மணியளவில் இந்த நபர் தனது கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் நீதிமன்ற கட்டிடத் தொகுதியை படமெடுத்தபோது நீதிமன்ற ஊழியர்கள் அவரை அங்கிருந்து வெளியேற்றியதாகவும் அதன் பின்னர் சற்று நேரம் தாமதமாகிய நிலையில் நவீன ரக சிறிய வீடியோ கமரா மூலம் மீண்டும் நீதிமன்றத் தொகுதியை படமெடுத்த போது பொலிஸார் அவரைக் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தியிருப்பதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனமொன்றை எடுத்துச் செல்ல உறவினர் ஒருவருடன் வந்ததாகக் குறிப்பிட்டுள்ள இச் சந்தேகநபர் முரண்பாடான தகவல்களை வெளியிட்டு வருவதாகவும் சந்தேக நபரை விசாரித்து வரும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
posted by தமிழினி @ 1:02 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி