செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Tuesday, November 14, 2006
உணவு இல்லை, கல்வி இல்லை, உயிருக்கும் பாதுகாப்பு இல்லை.
யாழ் குடாநாட்டில் இன்று வாழ்ந்து கொண்டு இருக்கும் பொது மக்களைப் பொறுத்தவரையில் வாழ்வியலுக்கு வேண்டிய எந்த வகையான வசதிகளும் இல்லையென்பதே உண்மையாகும். குறிப்பாக பொது மக்களின் வாழ்வுக்கு வேண்டிய உணவுப் பொருட்கள் இல்லை உயிருக்கும் இன்று உத்தரவாதம் இல்லை. இதே போன்று மாணவர்களைப் பொறுத்த வரையில் கல்வியும் இல்லை அவர்களின் உயிர்களுக்கும் கூட உத்தரவாதம் இல்லையென்ற நிலமையே இன்று யாழ் குடாநாட்டில் காணப்படுகின்றது.

இவ்வாறு யாழ்ப்பாணம் பல் கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பி;டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்…
சமாதானத்திற்கான பாதையென்று தெரிவித்தே நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏ9 வீதி திறக்கப்பட்டது. அந்தப் பாதையை மீண்டும் மீளத் திறப்பதன் மூலமே குடாநாட்டு மக்களின் இன்றைய அவலம் மட்டும் மன்றி இலங்கைக்கான அமைதி வழியும் திறக்கப்பட முடியும்.

முன்னர் எப் பொழுதும் கண்டிராத அவலத்தில் யாழ் குடாநாட்டு மக்களின் இருப்பு உள்ளது மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்ட நிலையிலும் தற்போதைய நிலமை திருந்துவதாக இல்லை. அன்றாட உணவுத் தேவைக்காக அலைவதும் அவற்றுக்காக நீண்ட வரிசையில் நாள் முழுவதும் தவம் கிடப்பதும் இங்கு வாழ்வாகியுள்ளது. மனிதரைத்தவிர அனைத்துப் பொருட்களின் பெறுமதியும் அதிகரித்துள்ளது.

ஏறக்குறைய ஆறு இலட்சத்திற்கு அதிகமான மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை ஆகாயக் கப்பலிலும், கடல் வழிக் கப்பலிலும், கொண்டு வந்து தீர்ப்போம் என்னும் அறிவுபூர்வமற்ற அனுகு முறையில் இங்குள்ள மக்கள் தெரிவு ஏதுமற்ற அடிமைகளாக்கப்பட்டுள்ளார்கள.; பொருள்கள் மிகக் குறைவாக உள்ள நிலையில் வருகின்ற சிறிதளவு பொருட்களும் கறுப்புச் சந்தையால் விழுங்கப்படும் என்ற சிறிய பொருளாதார உண்மையைக் கூட விளங்காத செயற்பாடுகளே காணப்படுகின்றது.

உள்ளவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதமற்று அனைவரையும் உலுப்பியுள்ள இந்த அவலத்தில் கடற் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்கள் மற்றும் நாளாந்த உடல் உழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் நலிந்த மக்கள் எனப் பலரது உயிர் வாழ்வுமே இன்று கேள்விக் குறியாகியுள்ளது குழந்தைகளுக்கான பால்மாவுக்கே வழியில்லையென்றால் ஏனையவர்களின் வாழக்கையைப் பற்றிப் பேசவே தேவையில்லை.

பசி பட்டினி பிச்சையெடுத்தல் என்பன மேலும் அதிகாரிக்கும் ஆபத்து தோன்றியுள்ளது. இவற்றுக்கு மேலாக போக்குவரத்து எரி பொருள் மின்சாரம் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் பெரும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது மனிதர்களின் உயிர் பாதுகாப்புப் பற்றிய அச்சம் என்றும் இல்லாத வாறு அதிகரித்துள்ளது.

மக்களின் பண்பாட்டு வாழ்வின் அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டுள்ளன. தொடர்பாடல் வசதிகள் மறுக்கப்பட்டு உறவுகள் துண்டாடப்பட்டு மக்கள் பெரும் உள நெருக்கீடுகளுக்குள் பெருமளவு மக்களின் மனங்கள் உடைந்து போயுள்ளன. யாழ்ப்பாண மாவட்டதிற்குள் மக்களின் செயல்பாடுகள் ஆயுத முனையில் முடக்கப்பட்டுளள்மையால் எல்லா செயற்பாடுகளும் முடங்கிப் போயுள்ளன. இவற்றைத் தட்டிக் கேட்கின்ற சிவில் சமூகத்தின் குரல்களும் ஆயுத முனையில் நசுக்கப்பட:டுள்ளன. அத்துடன் அவர்களின் குரல்களும் கருத்தில் எடுக்கப்படுவதில்லை.

இது நாள் வரை பிச்சை புகினும் கற்றல் நன்றே எனத் தமிழர் சமூகம் கொண்ட உணர்வும் தனி விழுமியமும் கூட இன்றைய ஒடுக்கப்பட்ட வெளியில் கேள்விக் குறியாகியுள்ள பேரவலம் காணப்படுகின்றது. சுதந்திரமாக பாடசாலைக் கல்வியை பிள்ளைகள் மேற்கொள்ள முடியாதபடி தென்மராட்சியிலும் வலி வடக்கில் உள்ள எல்லைக் கிராமங்களிலும் பாடசாலைகள் இடம் பெயர்ந்தும் மாணவர்கள் இடம் பெயர்ந்தும் பாடசாலைகள் தரை மட்டமாக்கப்பட்டும் காணப்படுகின்றது. பாடசாலை மாணவர்கள் அலைந்து திரியும் நிலைமை காணப்படுகின்றது
இரவு முழுவதும் வெடித்துச் சிதறும் செல் சத்தங்களுக்குள்ளும் காணாமல் போதல் ஆள் கடத்தல்கள் இரானுவப் புலனாய்வாளர்களின் கொலைகள் என்பவற்றினால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்குள்ளும்; பிள்ளைகளின் கல்வியும் நித்திரையும் விழுங்கப்படுகின்றன.

கடந்த காலத்தில் இடம் பெற்ற பல்வேறு இடரான நிலைகளிலும் இடையூறு இன்றி தொடர்ந்த எங்கள் பல் கலைக்கழக மாணவர்களின் கல்வி இன்று மறாக தடைப்பட்டுப் போயுள்ளது. ஒரு சமூகத்தின் மேம்பாட்டிற்கு இன்றியமையாது உள்ள அடிப்படையான உயர் கல்விக்கு இன்று ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலமையை மேலும் தொடர விடமுடியாது.

அச்சமும் அவலமும் சூழ சிதறிப் போன யாழ் பல் கலைக்கழக மாணவர் சமூகம் மீண்டும் கல்விச் செயற்பாடுகளுக்காக ஒன்று கூடுவதற்கான வழிவகைகளை விரைந்து காண்பது அவசியமாகும். மனித உரிமை கல்விச் சுதந்திரம் வாழ்வதற்கான உரிமை என்று உயர் தரு விழுமியங்களை ஆராதிக்கும் உலக நாடுகளின் மனச் சாட்சி இன்றைய யாழ்ப்பாண மக்களின் அவலம் பற்றி உரத்து உறுதியுடன் பேச வேண்டும் இலங்கை அரசும் அதன் படைத் தரப்பான இயந்திரங்கள் உட்பட அனைத்தும் இந்த மனித அவலத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.

போதிய உணவில்லை உரிய நேரத்திற்கு கல்வியில்லை ஆடிப்பாட வாய்ப்பில்லை போன்ற நிலமைகள் ஆரோக்கியமற்ற சந்ததியை எதிர்காலத்தில் உருவாக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சமாதானத்திற்கான பாதையென திறக்கப்பட்ட ஏ9 பாதையை மீளத் திறப்பதன் மூலம் குடாநாட்டு மக்களின் இன்றைய அவலத்தை மடடுமன்றி எதிர் கால இலங்கைக்கான வழியும் திறக்கும் என்ற உண்மையையும் இனியும் தாமதிக்காது அனைத்துதத் தரப்பினரும் உணர்ந்து செயற்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
posted by தமிழினி @ 10:45 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி