செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Thursday, November 16, 2006
வெடிகுண்டுப் பொருட்கள் கடத்திய சிங்கள இளைஞர்கள் புலிகளா?
[16 - November - 2006]

தியத்தலாவ பிரதேசத்தில் பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களுடன் இரண்டு சிங்கள இளைஞர்களை தியத்தலாவ பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் வெடி பொருட்கள் அடங்கிய பொதிகளை சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு தியத்தலாவை பிரதேசத்தில் மீகஸ்வத்த சந்தியிலுள்ள வீதித்தடை நிலையத்தை நோக்கி இரவு வேளையில் வந்த சந்தர்ப்பத்திலேயே வீதித்தடை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் ஏற்றிவந்த பொதிகளிலிருந்து வெடி மருந்துப் பொருட்களையும் மற்றும் ஜெலிக்நைற் வெடிகுண்டுக் குச்சிகளையும் சோதனையின் போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்டுபிடித்ததைத் தொடர்ந்தே மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர்.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்து அந்த இரண்டு இளைஞர்களும் மகாஓயா பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனத் தெரியவந்துள்ளது. மேலும், குறித்த வெடிகுண்டுப் பொருட்களை அவர்கள் எங்கே பெற்றுக்கொண்டார்கள் என்பது பற்றி அவர்களிடம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அவர்கள் பதில்கூற மறுத்துவிட்டதாகவும் தியத்தலாவ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கூறியுள்ளார். இவர்கள் ஏற்றிவந்த பொதிகளில் 4 கிலோகிராம் நிறைகொண்ட வெடிகுண்டு தயாரிப்புக்கான வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் குண்டு வெடிப்புக்கான ஜெலிக்நைற் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை தியத்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லோரன்ஸ் ரணதுங்கவின் அறிவுறுத்தலின் கீழ் ஜயதிஸ்ஸ, நௌபர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
posted by தமிழினி @ 12:58 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி