| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Tuesday, November 14, 2006 |
| விடுதலைப் போரின் அடுத்த கட்டம் ஆரம்பமாகப் போகிறது. |
இணைத்தலைமை நாடுகளின் வேண்டுகோளை மதித்து புலிகள் நிபந்தனையற்ற பேச்சிற்கு சம்மதித்ததை தவறாக அர்த்தப்படுத்தியது சிங்கள அரசு. புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்றும் சிங்களப்படைகள் இராணுவ பலத்தில் மேலோங்கி உள்ளார்கள் என்றும் எண்ணியது. அதன் வெளிப்பாடுகள் தான் பேச்சு ஆரம்பிக்க முன்கேகலிய ரம்புக்வெல புலிகளுக்கு விதித்த மூன்று நிபந்தனைகள். ஆனால் பின்னர் தான் நிபந்தனைகள் விதிக்கவில்லை என கரணமும் அடித்திருந்தார்.
சர்வதேச நாடுகளின் உதவித்தொகையில் சீவியம் நடத்தும் சிங்கள அரசுக்கு என்று தனியான கொள்கைகள் ஏதும் இருக்க முடியுமா? அதுதான் ரம்புக்வெலவின் குத்துக்க ரணத்திற்குக் காரணம். ரம்புக்வெல நிபந்தனை விதித்ததன் அர்த்தம் என்ன? தாம் பலமாக இருக்கிறோம் என்பதை தெரி விற்கும் முயற்சி. அதாவது மாவிலாறு, சம்பூர் ஆக்கிரமிப்புக்கள் இராணுவத்திற்கு மிகப்பெரும் பலத்தை கொடுத்து விட்டது போன்றும், புலிகள் பெரும் அழிவை சந்தித்து விட்டார்கள் போன்றதுமான கற்பனை.
பொதுவாக உலகில் போரில் வென்ற நாடுகள் அல்லது பலத்தில் மேலோங்கிய நாடுகள் தான் பலவீனமான நாடுகள் மீது நிபந்தனைகளை விதிப்பதுண்டு. சிங்கள அரசின் கற்பனையும் அது தான். அது மட்டுமல்லாது தான் தோன்றி த்தனமான விமானக்குண்டு வீச்சுக்கள், எறிகணை வீச்சுக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழும் மக்கள் மீதான படுகொலைகள் என அரச பயங்கரவாதமும் கட்டுக்கடங்க வில்லை.
புலிகள் இது தொடர்பாக பல தடவைகள் சர்வதேச த்திற்கும், நோர்வேக்கும், கண்காணிப்புக்குழுவிற்கும் கூறிவிட் டார்கள். ஆனால் எதுவுமே போர் வெறிகொண்ட அரசின் காதில் ஏறியதாக இல்லை. அரசு தனது அரசியல் தோல்விக ளை மறைக்க தமிழ் மக்களின் மீதான இன அழிப்புப் போரை முனைப்பாக்க முயன்றது. அதற்காக எதிர்வரும் ஆண்டிற்கான பாதுகாப்புச் செலவை 139.5 பில்லியன் ரூபாய்களாக உயர்த்தியதுடன், கனரக ஆயுதங்களும் வாங்கிக்குவிக்கப்படுகின்றன.
படையினரதும், சிங்கள மக்களினதும் மனவலுவை அதிகரிக்கும் முயற்சியில் ஜனாதிபதி முதல் அடிமட்ட சிங்கள அதிகாரிகள் வரை ஈடுபட்டுள்ளார்கள். அதன் ஓரங்கமே ஐப்பசி 10 ஆம்நாள் கட்டுநாயக்கா விமானப்படைத்தளத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி கிபீர் விமானத்திலும் ஏறி சிங்கள மக்களுக்கு வலுவூட்டியுள்ளார். அண்மைக்காலமாக விமானப்படை விமானங்கள் நடாத்தும் தாக்குதல்களால் தான் புலிகள் பெரும் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பது சிங்கள அரசின் கணக்கு. எனவே தான் 20 வருடங்களின் பின் ஜனாதிபதி ஒருவர் விமானப்படைத்தளத்திற்கு விஜயம் செய்ததுடன் போர்விமானத்திலும் ஏறிவிளையாடியுள்ளார்.
இந்த வீர விளையாட்டுக்களின் தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்ளை நிகழ்த்தி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சில பிரதேசங்களை கைப்பற்றிவிட்டு ஜெனீவா விற்குச் செல்வது அல்லது இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கு ஆத்திரமூட்டி பேச்சுக்களில் இருந்து அவர்களை விலகவைப்பது தான் அரசின் தந்திரம். அதற்காக அரசு கிழ க்கில் ஒன்று, வடக்கில் ஒன்றாக இரு களமுனைகளை தெரிவு செய்தது. கிழக்கில் வாகரையை ஆக்கிரமிக்கும் முயற்சியாகப் பனிச்சங்கேணியை கைப்பற்றுதல், வடக்கில் ஆனையிறவை கைப்பற்றுவதற்கு ஏதுவான முதற்படியாக பளையை கைப்பற்றுதல்.
பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு, ஒட்டுக்குழு உறுப்பினர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் இராணுவ மேஜர் தலைமையில் 400 இராணுவ த்தினரும், 75 ஒட்டுக் குழு உறுப்பினர்களும் மாங்கேணி படைமுகாமில் இருந்து நகர்வை ஆரம்பித்தனர். இவர்களுக்கு உதவியாக கடற்படையும் தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் தான் பெருமளவான ஒட்டுக் குழு உறுப்பின ர்களை முதல் முறையாக இராணுவம் பயன்படுத்தி உள்ளது. இது இரு நோக்கங்களை கொண்டது.
அதாவது பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டு பயிற்சிய ளிக்கப்பட்ட ஒட்டுக்குழு உறுப்பினர்களுக்கு ஒரு பயிற்சிக் களமாக பனிச்சங்கேணித ்தாக்குதலை ஏற்படுத்துதல்.
பனிச்சங்கேணி கைப்பற்றப்பட்டால் ஒட்டுக் குழு கிழக்கை மீட்கத்தொடங்கி விட்டார்கள் என பிரச்சாரத்தை முடுக்கிவிடுவது. ஆனால் தந்திரமாக இவர்களை உள்வாங்கிய புலிகள் ஒரு பெட்டிவடிவில் முற்றுகையிட்டு தாக்கத்தொடங்கினார்கள்.
புலிகளின் மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்த தளபதி கேணல் சொர்ணம் வழிநடத்த உக்கிரமான எதிர்ச்சமர் ஆரம்பித்தது. சிங்களப்படைக்கும் தமிழ் துரோகக்கும்பலுக்கும் நின்று நிதானித்து சமரை எதிர்கொள்ள நேரம் இருக்கவில்லை. வாகனங்கள், ஆயுதங்கள், இறந்த, காயமடைந்த சகாக்க ளையும் விட்டுவிட்டு முகாமுக்குப் பின்வாங்கி ஓடிவிட்டார்கள். 30 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும், 20 இற்கு மேற்பட்ட ஒட்டுக் குழுவினரும் பலியானதுடன் 75 பேர் வரை காயமடைந்தார்கள். இந்த மோதலில் தாக்குதலுக்குத் தலைமை தாங்கி வந்த மேஜரும் பலியாகிவிட்டார். இராணுவ வாகனங்கள் உட்பட பெருமளவு ஆயுதங்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டது. இதில் கைப்பற்றப்பட்ட 81 மி.மீ மோட்டார்கள் 2 உம் அவற்றிற்கான எறிகணைகளும் முக்கியமானவை.
இராணுவத்தின் 11 உடல்களும், ஒட்டுக்குழுவின் 06 உடல்களும் கைப்பற்றப்பட்டதுடன் ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். போர்நிறுத்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் மூலம் தெற்கில் அரச படைகள் வலுவுள்ளவர்கள் என ஏற்படுத்தப்பட்ட தோற்றப்பாடு பனிச்ச ங்கேணி தாக்குதல் மூலம் கலைந்து போகாமல் தடுப்பதற்கு அரசும் தென்பகுதி ஊடகங்களும் மிகவும் திட்டமிட்டு செயற்பட்டனர். தாக்குதலை இருட்டடிப்பு செய்ய முயன்றனர், கருணாகுழு தாக்கியதாக செய்தி பரப்பமுனைந்தனர் ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.
எனவே தான் இறந்த சிங்களப் படைகளின் உடல்களை கூட புதைத்து மீண்டும் தோண்டி எடுத்து கையளிக்க வேண்டிய நிலை புலிகளுக்கு ஏற்பட்டது. இறந்த படையினரின் உடல்களை விட தமது அரசியல் நலன்கள் தான் தற்போது சிங்கள இனவாதிகளுக்கு முக்கியமானது. அதற்கு ஒத்திசை வாகவே தென்பகுதி ஊடகங்களும் செயற்பட்டிருந்தன.
கிழக்கில் ஏற்பட்ட தோல்வியையும் வடக்கில் சரி செய்து விடலாம் என எண்ணிய அரசு பளையை கைப்பற்றும் நடவடிக்கைக்கு நாள் குறித்தது. ஓகஸ்ட் 11 ஆம் நாள் படையினர் புலிகள் மீது ஒரு வலிந்த தாக்குதலுக்கு ஆய த்தமான வேளை முகமாலை முன்னரங்கை புலிகள் உடறுத்து தாக்கி இருந்தார்கள். அதற்குப் பதிலடியாக ஒக்ரோபர் 11 ஆம் நாளை தனது தாக்குதலுக்கு அரசு தெரிவு செய்தது. இந்த நாளில் மற்றும் ஒரு விசேடம் உண்டு. அதற்கு முதல் நாள் தான் சிங்கள இராணுவத்தின் 57 ஆவது ஆண்டுவிழா.
2001 இல் தீச்சுவாலை நடவடிக்கையின் போது படையினர் நகர்ந்த அதே பாதையால் இம்முறையும் நடவ டிக்கை ஆரம்பமானது. செறிவான ஆட்டிலறி, பல்குழல் எறிக ணை வீச்சுக்கள், விமானக் குண்டு வீச்சுக்களுடன் சிங்களப் படையின் படைப்பிரிவுகள் நகர்ந்தன. புலிகளை பொறுத்தவரை இராணுவத்தின் இந்த நகர்வை முன்கூட்டியே கணித்திருந்தனர். அதை எதிர்கொள்ள வியூகங்களை வகுத்ததுடன் கேணல் கிட்டு ஆட்டிலறி படைப்பிரிவுத்தளபதி கேணல் பானுவும் வடபோர் முனைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
நாகர்கோவில் அச்சில் முன்னேறிய படைகள் சிறிது நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதுடன், முகமாலை, கிளாலி ஊடாக முன்னேறிய படைகள் புலிகளின் முன்னணி நிலைக்கு உள்வாங்கப்பட்டார்கள். தமது இரண்டாவது நிலைக்கு தந்திரமாக பின்னகர்ந்த புலிகளின் அணிகள் இராணுவத்தை சுற்றிவளைத்து தாக்கத் தொடங்கினார்கள். துல்லியமானதும், மிகச்செறிவானதுமான மோட்டார், ஆட்டிலறித்தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத படையினர் சிதறி கண்ணிவெடி வயல்களின் ஊடாக ஓடியுள்ளார்கள். அதுவே இராணுவத்தின் பேரழிவுக்குக் காரணமாக அமைந்தது.
படையினருக்கு உதவியாக வந்த டாங்கிகளும் தப்பவில்லை இரண்டு ரி-55 ரக பிரதான போர் டாங்கிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன், மேலும் இரு டாங்கிகள் சேதமடைந்தன. ஐந்து மணிநேரத்தில் முடிந்து போன சமரில், 200 இற்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட, 515 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 75 சடலங்களையும் நூற்றிற்கும் மேற்பட்ட ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றியதுடன், ஒரு சிப்பாயும் கைது செய்யப்பட்டார். இவர் சத்தமின்றி நடைபெறும் நாலாம் கட்ட ஈழப்போரில் வடபகுதியில் கைதான முதல் சிப்பாய். முன்னர் கிழக்கில் வாகனேரி, பனிச்சங்கேணி தாக்கு தல்களில் தலா ஒவ்வொரு சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு இருந்தது அனைவரும் அறிந்ததே.
முகமாலை சமரில் கனரக ஆயுதங்களின் நேர்த்தியான கையாளுகையும், தளபதிகளின் சிறந்த போர்க்கள நுட்பமும், கனரக ஆயுதங்களின் ஒருங்கிணைந்த பயன்பாடும் புலிகளின் வெற்றிக்குக் காரணமாகியதுடன். அவர்களின் இழப் புக்களையும் வெகுவாகக் குறைத்துள்ளது. 4 துணைப் படையினரும், 18 போராளிகளும் வீரச்சாவைத் தழுவியிருந்தனர். இது ஏனைய சமர்களுடன் ஒப்பிடும் போது குறைவானது.
2000 இல் ஆனையிறவை இழந்த பின்னர் சிங்களப் படை அதை மீட்பதற்கு கொடுக்கும் விலைகள் மிக, மிக அதிகம். தற்போது தென்னிலங்கையைப் பெறுத்தவரை ஆனை யிறவு இராணுவ முக்கியத்துவத்தை விட அரசியல் முக்கியத் துவம் வாய்ந்ததாகவே மாறியுள்ளது. |
posted by தமிழினி @ 10:42 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|