செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Wednesday, November 15, 2006
ரவிராஜ் படுகொலைக்கு சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் படுகொலைக்கு எதிராக சுவிஸ் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ றொஜர் நோட்டமன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நடராஜா ரவிராஜ் அவர்கள் கடந்த 10ம் திகதி வெள்ளிக்கிழழை கொழும்பில் படுகோலை செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

இதுபோhன்ற அரசியல் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். இது போன்ற படுகொலைகள் நிறுத்தப்படாதவிடத்து, இலங்கைத் தீவில் வாழும் பல இன மக்களிடையே சமரசப் பேச்சுக்களோ அல்லது தீர்வுகளோ ஒரு போதும் ஏற்பட மாட்டாது.

இலங்கையில் உள்ள அனைத்து ஆயுதம் தாங்கிய தரப்பினரும், ஒட்டுக் குழுக்களும் தமது வன்முறைகளைக் கைவிடவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

எதிர்த் தன்மையைத் தவிர்த்து, ஒரு சாமாதானப் பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அனைத்து இன மக்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒன்று சேர்ந்து அமைதியாக வாழக்கூடிய சமஷ்டி அமைப்பு முறையைக் கைக்கொள்ளவேண்டும்.

அத்தோடு இத்தீவில் வாழும் ஒவ்வொரு பிரஜையின் அடிப்படை மனித உரிமையும் மதிக்கப்படவேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பதிவு
posted by தமிழினி @ 9:09 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி