செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Wednesday, November 15, 2006
சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி

தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது.

ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது.

தமிழர் பேரவையின் சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், காசிலிங்கம் இராமகிருஸ்ணன், தமிழ் இளையோர் அமைப்பு சார்பாக சுபாஸ்கரன் மற்றும் தமிழ்ப் பெண்கள் அமைப்பு சார்பாக நிர்மலா பரராஜசிங்கம் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைமைப் பிரதிநிதியைச் சந்தித்து மனுவைக் கையளித்தனர்.

தமிழர் பிரதிநிதிகளுடன் சுமார் 45 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றப் பிரதிநிதி தேரி பேக்கெட், தமிழ் மக்களுக்கு எதிரான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்தும்படியான அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று உறுதி அளித்தார்.

இது பற்றி அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இரண்டு தரப்பினரது நியாங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் உள்வாங்கியிருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு இடையூறு இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்குவதற்கான அழுத்தத்தை சிறிலங்கா அரசிற்கு வழங்குவதாகவும் அவர் உறுதியளித்தார்.

அடுத்த மாதம் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு முன்னதாக அந்த அழுத்தத்தை ஐரோப்பிய ஒன்றியம் வழங்க உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

-புதினம்.
posted by தமிழினி @ 7:40 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி