செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Thursday, November 16, 2006
யாழ். நகரில் ஒரு கிலோ மீனின் விலை ஆயிரம் ரூபா
யாழ். நகரில் மீன் விலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது. ஒரு கிலோ விளைமீன் ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.

யாழ். நகரின் பாஷையூர், குருநகர் மற்றும் நாவாந்துறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களாக மேற்படி பிரதேசங்களில் கரையில் இருந்து சில குறிப்பிட்ட தூரம் வரை மட்டுமே மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

இதனால் இப்பிரதேசத்தில் மீன்களை பிடிக்க முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்ப வேண்டிய நிலை குறித்து மீனவர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது. படையினர் மீன் பிடிக்கத் தடை செய்திருப்பதனால் நாம் விரக்தியடைந்துள்ளோம் என மீனவர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
posted by தமிழினி @ 12:30 AM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி