| தொடர்பானவை |
| தொடர்புள்ள விளம்பரங்கள்
|
| ஒலி |
| இன்னமும் இணைக்கப்படவில்லை |
| காணொளி |
| இன்னமும் இணைக்கவில்லை |
| Other things |
|
|
| Other things |
|
|
|
| Monday, November 27, 2006 |
| புலிகளின் தலைவரின் உரை பல கேள்விகளை எழுப்பியுள்ளது - கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் |
கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேசத் தீர்மானித்துள்ளோம்.
இலங்கையில் 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இங்கு உள்ள கண்காணிப்பு அமைப்பு என்ற ரீதியில் இந்த உரைக்கான விளக்கத்தை நாம் புலிகளிடம் கோரவுள்ளோம். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் இன்னமும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்களா? இது குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம்.புலிகளின் தலைவரின் உரையை நாம் மிகக் கவனமாக ஆராய்ந்துள்ளோம்.
இந்த உரை எமக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப்பீடத்துடன் இது குறித்து தெளிவாகப் பேசவுள்ளோம். |
posted by தமிழினி @ 11:32 PM  |
|
|
|
|
தொடர்பானவை |
|
|
| என்னைப் பற்றி |
|

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
|
| முன்னைய பதிப்புக்கள் |
|
| பெட்டகம் |
|
| தொடுப்புக்கள் |
|
|
| Template by |
|
|