செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Monday, November 27, 2006
காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

*அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

**********யாழ்ப்பாண அவலங்கள்***********

காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை இருபாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்தவரான சங்கரப்பிள்ளை செந்தூரன் (வயது23) என்பவரே சடலமே மீட்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் காணாமற் போயிருந்தார். நேற்றுக் காலை இவரின் சடலம் இருபாலை விளையாட்டரங்கு வீதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய்ப் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்துள்ளனர்.

தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் தாவடி வடக்கில், இணுவில் பாலா வோடைப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இரு இளைஞரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடி,கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.


இவர்களில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டிருந்தன என்றும் இருவரது சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மல்லாகம் நீதவான் திருமதி. ச.இளங்கோவன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை நடத்தியுள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினருடன் அதனோடு சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


இதே வேளை வெள்ளை நிறவாகனத்தில் வந்திறங்கிய சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச் சூட்டுச் சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சகோதரர்களான மரியதாஸ் யூலி (32) அத்துடன் மரியதாஸ் யூலியஸ் (30) என்ற இருவருமே கொல்லப்பட்டுள்ளது. இவர்களது சகோதரியான மரியதாஸ் யஸ்மினி (32) என்ற பெண்மணியே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

posted by தமிழினி @ 11:15 PM  
0 Comments:
Post a Comment
<< Home
 
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி