செய்திகள் உடனுக்குடன்...

தொடர்பானவை
தொடர்புள்ள விளம்பரங்கள்
ஒலி
இன்னமும் இணைக்கப்படவில்லை
காணொளி
இன்னமும் இணைக்கவில்லை
Other things
Other things
Saturday, December 2, 2006
அண்மைய ஈழத்து தலைப்புச் செய்திகள்
* How Gotabhaya Rajapakse escaped death - D.B.S. Jeyaraj
* வெள்ளவத்தையில் எட்டுத்தமிழர் கைது - உதயன்
* காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைக்க இந்திய அரசு சுமார் 230 கோடி ரூபாவை இலங்கை அரசுக்கு வழங்கவுள்ளது. - TamilWin
* அம்பாறை திருக்கோவில் பகுதியில் மூவர் சுட்டுக்கொலை. - சங்கதி
* 4 suspects held in suicide attack on Lanka Defence Secy. - Hindu, India * தீவகத்தில் கடற்படையினர் ஒத்திகை. - சங்கதி
* Sri Lankan Kfirs bomb Mullaithivu civilian settlements - LTTE Peace Secretariat
* Widen focus beyond child soldiers to humanitarian issues, Rock tells UN - TamilNet
* விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் பொன்சேகா - புதினம்
* Norwegian peace envoy to visit Kilinochchi Tuesday - TamilNet
* விடுதலைப் புலிகளை தடை செய்ய சிறிலங்கா அரசு யோசனை - புதினம்
* US condemns suicide attack on Sri Lankan defence secretary - TamilNet
* Sri Lanka President's brother escapes bomb blast - Reuters* யாழ்பாணத்தில் மேலும் இருவர் சுட்டுக்கொலை - பதிவு
* கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து குண்டுத்தாக்குதல் - புதினம்
* Gotabaya Rajapakse narrowly escapes Bomb blast - TamilNet
posted by தமிழினி @ 10:20 PM   0 comments
Wednesday, November 29, 2006
தமிழீழத் தனியரசு அமைந்தால் மகிழ்ச்சியடைவேன் - கலைஞர்
தேசியத் தலைவர் சுதந்திரத் தமிழீழம்; பெற்றால் தான் மகிழ்ச்சியடைவேன் என தமிழக முதல்வர் மு.கருணாநிதி இன்று ஊடகர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும்போது தெரிவித்துள்ளார்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நாள் உரை தொடர்பில் இன்று தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியிடம் சென்னையில் இன்று ஊடகர்கள் கேட்டபோது, இது குறித்து தான் பல ஆண்டுகளிற்கு முன்பே கருத்துத் தெரிவித்திருக்கிறேன். அவர்(தலைவர் பிரபாகரன்) சுதந்திரத் தமிழீழம் பெற்றால் நான் மகிழ்ச்சியடைவேன்.

அதற்கிடையில் இருக்கிற ஈழத்தமிழ் மக்கள் எத்தகைய படுகொலைகளிற்கும் ஆளாகமல் ஏதாவது ஒரு மாற்று இரு சாராரும் இணைந்து கண்டுபிடுத்து அதில் ஒரு உடன்பாடு ஏற்பட்டு, அங்கு அமைதி ஏற்படுமானால் அதற்கும் மகிழ்ச்சியடைவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

-சங்கதி
posted by தமிழினி @ 11:03 PM   3 comments
விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலிட்டது தவறு - அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் அரசாங்கத்தினால், அமெரிக்க அரசயலமைப்புக்கு முரணான விதத்திலும், தெளிவற்ற நிலையிலும், பயங்கரவாதப் பட்டியலிடப்பட்ட இரண்டு குழுக்கள் குறித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் குர்டிஸ்தான் விடுதலை அமைப்பு ஆகிய இரண்டு குழுக்களையும், 911 தாக்குதலின் பின்னர், பயங்கரவாதப் பட்டியலில் இணைத்து, இந்த அமைப்புக்களின் சொத்துக்களை முடக்கியமை செல்லுபடியற்றது என அமெரிக்க மாவட்ட நீதிபதி ஓட்றி கொலின்ஸ் இன்று தெரிவித்தார்.

புஷ் அரசாங்கத்தினால் இந்த இரண்டு அமைப்புக்களையும் பயங்கராவாதப் பட்டியலில் இணைக்கப்பட்டமைக்கு எதிராக வோஷிங்ரனைத் தளமாகக்கொண்டு இயங்கி வரும் The Humanitarian Law Project என்ற சட்ட நிறுவனம் இந்த வழக்கினை வாதாடியது.

இந்த நிறுவனத்தின் வழக்கறிஞர் டேவிட் கோல் இந்த வழக்கின் தீர்ப்புக் குறித்து கருத்து வெளியிடுகையில், ஜனாதிபதி புஷ், தனது அதிகாரத்தின் வாயிலாக இந்தத் தடையை பிரயோகித்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பின் மூலம் பட்டியலிடப்பட்ட ஏனைய குழுக்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்று எனத் தெரிவித்த டேவிட் கோல், ஆனால் இந்த பட்டியல் குறித்து பல சந்தேகங்கள் எழுந்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.

வழங்கப்பட்ட தீர்ப்புக் குறித்து விடுதலைப்புலிகள் மற்றும் குர்டிஸ்தான விடுதலை அமைப்புக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதாக ஏபி செய்தி நிறுவனம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தீர்ப்பு தொடர்பாக அமெரிக்க நீதிநிர்வாக அமைச்சின் பேச்சாளர் சாள்ஸ் மில்லர் கருத்து தெரிவிக்கும்போது, நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாகவும், அமெரிக்க அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவும் தற்போது ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தீர்ப்புக் குறித்து எந்தவித கருத்தினையும் தெரிவிப்பதற்கு வெள்ளை மாளிகை வட்டாரங்கள் மறுப்புத் தெரிவித்துள்ளன.
posted by தமிழினி @ 12:33 AM   0 comments
Tuesday, November 28, 2006
சிறிலங்கா அரசு கருணா படையினரால் சிறுவர்கள் கடத்தப்படுவதை தடுக்கவேண்டும் -மனித உரிமைகள் குழு
சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடனடியாக சிறுவர் மற்றும் இளைஞர்கள் கருணா குழுவினரால் கடத்தத்தபடுவதை தடுக்க வேண்டும். எனவும் அத்துடன் கடத்தபடுபவர்களை மீட்டு அவர்களது குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சேர்த்துவிடவேண்டும் எனவும் மனித உரிமைகள் அமைப்பு இன்று செவ்வாய்கிழமை விடுத்த அறிகையில் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் அமைபான கியுமன் ரைட் வாட்ச்(Human right watch) அடுத்த மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் சிறிலங்கா அரசப்படையினர் மற்றும் பொலிஸார் சிக்கலடைந்துள்ள நிலையில் அதே நேரம் நேரடியாக சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு உடந்தையாக இருந்துள்ளனர்..எனவும் நூற்றுக்கும் மேற்ப்பட்டவர்கள் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி மற்றும் ரொய்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. .

அமெரிக்காவின் நியுயோக்கினை தளமாக கொண்டமைந்த இந்த மனித உரிமைகள் அமைப்பு -"தம்மிடம் சிறுவர்கள் கருணா படையினரால் கடத்தபடுவதற்கு நேரடியாக சிறிலங்கா பாதுகாப்பு படையினர் உடந்தையாக இருந்துள்ளனர்.என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இருப்பதாகவும் "தெரிவித்துள்ள இந்த அமைப்பின் சிறுவர் நலன் உரிமைகள் வழக்கறிஞர் ஜொ பெக்கர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஐ.நா சிறார் உரிமைகள் நலன் பிரதிநிதி அலன்றொக் இதே கருத்தினை தனத் 10 நாள் ஆய்வு அறிக்கையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது.
posted by தமிழினி @ 7:18 PM   0 comments
Monday, November 27, 2006
மட்டகளப்பு பகுதியில் இராணுவ முன்னரங்குகள் மீது புலிகள் தாக்குதல்-இராணுவம்
நேற்று தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசிய தலைவர் பிரபாகரனின் மாவீரர் உரையினை அடுத்து செவ்வாய்க்கிழமை காலை முதல் விடுதலைப்புலிகளிற்கும் இராணுவத்தினரிற்கும் இடையில் உக்கிரமான ஷெல் மற்றும் ஆட்டிலறி தாக்குதல்கள் நடைபெறுவதாக இராணுவ தரப்பு செய்தி மேற்கோல்காட்டி ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

152mm உடைய ஆட்லறி ஷெல் குண்டுகள் தமது பகுதியில் அதிகமாக வீழ்ந்து வெடுத்துள்ளதாகவும் புலிகள் முதன்முறையாக இந்த ஆயுத பாவனையை பயன்படுத்தி வருகிறார்கள் எனவும் இராணுவ முன்னரங்கள் மீது பல ஷெல்கள் வீழ்ந்து வெடித்தமையால் இரு இராணுவ வீரர் பலியானார் இருவர் காயமடைந்துள்ளனர் எனவும் இரானுவ தெரிவித்துள்ளது..

எங்களுடைய முன்னரங்க மோட்டார் குண்டுகளினாலும் எறிகணைகளினாலும் தாக்குதலுக்குள்ளகியுள்ள்து. தொடர்ந்து புலிகள் அதி பயங்கரமாக ஆயுதங்கள் முலம் நமது பகுதியை தாக்குகிறார்கள் என இராணுவ தரப்பில் பேசவல்ல் அதிகாரியான உபாலி ராஜபக்ஷ ரொய்ட்டருக்கு தெரிவிதுள்ளார் இத்தாகுதல் குறித்து விடுதலைப்புலிகளின் தரப்பில் எந்த செய்திகளும் இதுவரை வெளியாகவில்லை..
posted by தமிழினி @ 11:37 PM   0 comments
புலிகளின் தலைவரின் உரை பல கேள்விகளை எழுப்பியுள்ளது - கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர்
கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது மாவீரர் தின உரையினை மிகவும் ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்துவருகின்றோம் என்று யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவின் பேச்சாளர் தோஃபினூர் ஓமர்ஸன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் உரையை, இலங்கையில் அரசும் விடுதலைப் புலிகளும் 2002 ஆம் மேற்கொண்ட யுத்த நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுகின்றதா எனக் கண்காணிக்க வந்த அமைப்பு என்ற ரீதியில் நாம் மிக ஆழமாகவும் அதிக முன்னுரிமையுடனும் அவதானித்ததோடு எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப் பீடத்துடன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் அவர்களின் எதிர்கால நிலைப்பாடு என்ன என்பது பற்றி பேசத் தீர்மானித்துள்ளோம்.

இலங்கையில் 2002ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த ஒப்பந்தத்தைக் கண்காணிக்க இங்கு உள்ள கண்காணிப்பு அமைப்பு என்ற ரீதியில் இந்த உரைக்கான விளக்கத்தை நாம் புலிகளிடம் கோரவுள்ளோம். அதாவது யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்க புலிகள் இன்னமும் அர்ப்பணிப்போடு இருக்கின்றார்களா? இது குறித்த அவர்களின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக பேச முடிவு செய்துள்ளோம்.புலிகளின் தலைவரின் உரையை நாம் மிகக் கவனமாக ஆராய்ந்துள்ளோம்.

இந்த உரை எமக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. எமக்கு கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்தில் புலிகளின் தலைமைப்பீடத்துடன் இது குறித்து தெளிவாகப் பேசவுள்ளோம்.
posted by தமிழினி @ 11:32 PM   0 comments
காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

*தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

*அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

**********யாழ்ப்பாண அவலங்கள்***********

காணாமற் போன இளைஞன் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு தினங்களாகக் காணாமற் போயிருந்த இளைஞர் ஒருவர் நேற்றுக் காலை இருபாலைப் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி கலாசாலை வீதியைச் சேர்ந்தவரான சங்கரப்பிள்ளை செந்தூரன் (வயது23) என்பவரே சடலமே மீட்கப்பட்டுள்ளார்.


இவர் கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டிலிருந்து வெளியே சென்ற பின்னர் காணாமற் போயிருந்தார். நேற்றுக் காலை இவரின் சடலம் இருபாலை விளையாட்டரங்கு வீதியில் சடலமாக மீடக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய்ப் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப் படைத்துள்ளனர்.

தாவடியில் வெட்டுக் காயங்களுடன் இரு சடலங்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் தாவடி வடக்கில், இணுவில் பாலா வோடைப் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இரு இளைஞரின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடி,கோண்டாவில் பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.


இவர்களில் கழுத்து மற்றும் கைகள் வெட்டப்பட்டிருந்தன என்றும் இருவரது சடலங்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மல்லாகம் நீதவான் திருமதி. ச.இளங்கோவன் சம்பவ இடத்திற்குச் சென்று சடலங்களைப் பார்வையிட்ட பின்னர் விசாரணைகளை நடத்தியுள்ளார்.

அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் சிறிலங்காப் படையினரால் சுட்டுக் கொலை - சகோதரி படுகாயம்.

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினரின் கெடுபிடிகள் காரணமாக இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அகதிமுகாம்களில் வாழ்ந்து வந்த அப்பாவிப் பொதுமக்கள் மீது சிறிலங்காப் படையினருடன் அதனோடு சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரினால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.


இதே வேளை வெள்ளை நிறவாகனத்தில் வந்திறங்கிய சிறிலங்காப் படையினரின் துணை இராணுவக்குழுவினர் கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இச் சூட்டுச் சம்பவத்தின் போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கொல்லப்பட்டதோடு மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவத்தில் சகோதரர்களான மரியதாஸ் யூலி (32) அத்துடன் மரியதாஸ் யூலியஸ் (30) என்ற இருவருமே கொல்லப்பட்டுள்ளது. இவர்களது சகோதரியான மரியதாஸ் யஸ்மினி (32) என்ற பெண்மணியே படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

posted by தமிழினி @ 11:15 PM   0 comments
தொடர்பானவை
என்னைப் பற்றி

Name: தமிழினி
Home:
About Me:
See my complete profile
முன்னைய பதிப்புக்கள்
பெட்டகம்
தொடுப்புக்கள்
Template by

ஈழவலி